முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விடுத்த எச்சரிக்கை | Vijayabhaskar

Update: 2023-11-11 10:48 GMT

பொதுமக்களுக்கு குடிநீர் வழங்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் அருகே, விஜயபாஸ்கர் வழக்கம்போல், காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருந்திராபட்டியில் குடிநீர் வரவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, குடிநீர் வடிகால் வாரிய அலுவலரிடம் தொலைபேசியில் பேசிய விஜயபாஸ்கர், குடிநீர் வழங்காவிட்டால் வீதியில் இறங்கி போராட இருப்பதாகத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்