கையும் களவுமாக சிக்கிய பெண் அதிகாரி - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Update: 2024-04-26 14:27 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில், 10 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சமாக பெற்ற பெண் அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்திருக்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த நபர் ஒருவர், வீடு கட்டுவதற்காக நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டதாகவும், இதற்கு கட்டட அமைப்பு வரைவு ஆய்வாளர் ஜோதிமணி பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அந்நபர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகாரளித்த நிலையில், பத்தாயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக ஜோதிமணியிடம் கொடுக்கச் சொல்லி புகார்தாரரை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு விரிக்கப்பட்ட வலையில், லஞ்சப் பணம் பெற்ற ஜோதிமணியை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்த நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்