"அன்று இரவெல்லாம்"... நினைத்து நினைத்து குமுறும் வித்யாபாலன்... விருது விழாவில் நடந்தது என்ன..?

Update: 2024-04-27 11:04 GMT

விருது வழங்கும் விழாவில் தான் அவமதிக்கப்பட்ட நிகழ்வை வருத்தத்துடன் நினைவுகூர்ந்தார் நடிகை வித்யாபாலன்... ஹேய் பேபி படத்திற்காக ரசிகர்களின் ஆதரவைப் பெறாததற்கான விருது தனக்கு வழங்கப்பட்டதாகவும், அந்த விருதை வழங்கும் போது, "தனது உடைகள் ஆடை வடிவமைப்பாளர் தேர்வு செய்தது தான்... நான் தேர்வு செய்தவை அல்ல" என்று தான் எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கவில்லை என்று தெரிவித்த அவர், அந்த நேரத்தில் தைரியமாக பேச முடியாமல் தவித்ததாகக் குறிப்பிட்டார். அந்த விருதை மௌனமாக வாங்கிக் கொண்டு அதை எண்ணி இரவு முழுவதும் தூங்கவில்லை என்று தெரிவித்த வித்யாபாலன், சினிமா பின்னணி இல்லாமல் வந்தால் இதுபோன்ற அவமானங்களை எதிர்கொள்ள வேண்டும் என தான் தெரிந்து கொண்டதாகவும், தனக்கு மாடர்ன் உடைகளை விட புடவை அணிவதே பிடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்