சென்னை-நாகர்கோவில் சிறப்பு வந்தே பாரத் ரயில் - நல்ல செய்தி சொன்ன தெற்கு ரயில்வே

Update: 2024-04-28 01:53 GMT

சென்னை - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவையை நீட்டித்து, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வியாழக்கிழமை தோறும் சென்னை எக்மோர் நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாராந்திர வந்தே பாரத் ரயில், ஜூன் மாதம் 26 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய தினங்களில் வாரம் முன்று முறை, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் சேவை, ஜூன் 30 ஆம் தேதி வரையும் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்