எமனாக எதிரே வந்த முன்னாள் காதலன்... நொடியில் நடந்த சம்பவம் - வெளியான திடுக்கிடும் தகவல்

Update: 2024-04-20 11:04 GMT

திருப்பத்தூர் அடுத்த ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் அஜித்குமார். ஆட்டோ ஓட்டுநரான இவர், பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவர, அவர்கள் கடந்த 7 வருடங்களுக்கு முன்பே வேறொருவருடன் பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதில், அப்பெண்ணிற்கு ஐந்து வயதில் பெண் குழந்தை ஒன்றுள்ள நிலையில், திடீரென கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அப்பெண் கணவரை பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கணவரை பிரிந்த தன் காதலியுடன் அஜித்குமார் மீண்டும் பழகி வந்திருக்கிறார். இதில், திடீரென அப்பெண் அஜித்குமாருடன் பேசுவதை நிறுத்தியதால், ஆத்திரமடைந்த அவர்.. திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே பெண்ணை வழிமறித்து கத்தியால் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்நிலையத்தில் தானாகவே சரணடைந்த இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்