டீ குடித்து கொண்டிருக்கும்போதே பறிபோன உயிர்.. ரியல் எஸ்டேட் அதிபருக்கு நடந்த அதிபயங்கரம்

Update: 2024-04-18 02:56 GMT

டீ குடித்து கொண்டிருக்கும்போதே பறிபோன உயிர்.. ரியல் எஸ்டேட் அதிபருக்கு நடந்த அதிபயங்கரம் - வெட்டி வீசி மர்ம கும்பல் வெறிச்செயல்..கொடூர கொலையின் பின்னணி என்ன?

#murdermystery #virudhunagar #realestate #thanthitv

சாத்தூர் அருகேயுள்ள சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தவிட்டுராஜ். 60 வயதான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், பக்கத்து ஊரில் உள்ள தேநீர் கடையில் டீ குடித்து கொண்டிருக்கும் போது மர்மநபர்களால் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தவிட்டுராஜின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தலைமறைவாக உள்ள கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்