ராமேஸ்வரத்தில் வெடித்த போராட்டம்.. "எதுக்கும் பாதுகாப்பு இல்லை" - முத்தரசன் பரபரப்பு பேச்சு

Update: 2024-03-08 04:40 GMT

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்து, சிறை தண்டனை விதிக்கும் இலங்கை அரசைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பதை, இந்திய அரசு தடுக்கத் தவறி விட்டதாக கூறி மீனவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழக மீனவர்களுக்கு உயிருக்கும் உடைமைகளுக்கும் தொழிலுக்கும் பாதுகாப்பிலாத சூழல் நிலவுவதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்