தூத்துக்குடியை அதிரவைத்த கொலை...கோர்ட்டில் சரணடைந்த 3 பேர் - நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

Update: 2024-03-02 06:23 GMT

தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கில், கொலையாளிகள் மூவர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தை சேர்ந்த வடிவேல் முருகன் என்பவர், கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பின் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வெட்டிக்கொன்றனர். சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசார், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், கொலை வழக்கில் தேடப்பட்ட தூத்துக்குடி வல்லநாடு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி, திருநெல்வேலி நாரயணமலப்புரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து ஆகிய 3 பேர், திருச்சி 5வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாலாஜி முன்னிலையில் சரணடைந்தனர். 3 பேரையும் மார்ச் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்