கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிறுவன் - உதவிய சிசிடிவி காட்சிகள் - ஒரு மணி நேரத்தில் கிடைத்த நற்செய்தி

Update: 2024-04-16 03:22 GMT

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிறுவன்

உதவிய சிசிடிவி காட்சிகள்

ஒரு மணி நேரத்தில் கிடைத்த நற்செய்தி

#littleboy #missing #police #thanthitv

தருமபுரியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிறுவனை ஓமலூரில் போலீசார் பத்திரமாக மீட்டனர். கோவையை சேர்ந்த ஆனந்த பாபு குடும்பத்தினருடன் பெண்ணாகரத்தில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக வந்துள்ளார். பின்னர், திருமணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பும் வழியில், தர்மபுரி பேருந்து நிறுத்ததில் காரை நிறுத்தி குடும்பத்துடன் குளிர்பானம் அருந்தி கொண்டிருந்த போது, தனது 4 வயது மகன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, சிறுவன் தவறுதலாக பேருந்தில் ஏறி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, ஓமலூரில் சிறுவனை போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்....

Tags:    

மேலும் செய்திகள்