போதை தலைக்கேறி காவலரிடம் வம்பிழுத்த இளைஞர்கள் - வெளியான வீடியோ காட்சிகள்

Update: 2024-04-27 14:21 GMT

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் மது போதையில் தகராறு செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் சென்ற திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஹரிராஜன் மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரும் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த இருவரும் மருத்துவமனையில் தகராறு செய்துவிட்டு, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடமும் தகாத வார்த்தைகளில் பேசி வீண் வம்பு இழுத்து வாக்குவாதம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்