ஒரே குடும்பத்தில் பலியான 4 பேர்.. பூமிக்கு வரும் முன்னே பிரிந்து சென்ற தந்தை | Sivakasi

Update: 2024-05-10 04:44 GMT

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை இழந்து, இளம்பெண் ஒருவர் தவித்து வருகிறார். செங்கலம்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களில், லட்சுமி, அவருடைய தாயார் ஆவுடையம்மாள், முத்து, பேச்சியம்மாள் ஆகிய நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அந்த குடும்பத்தைச் சேர்ந்த அழகுஜோதி என்பவர், 4 பேரை இழந்து தவிப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதேபோல், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ரமேஷ் என்பவருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், அவருடைய மனைவி கர்ப்பிணியாக உள்ளார். தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்