மின்கம்பத்தில் மோதிய டேங்கர் லாரி - நூலிழையில் தப்பிய உயிர்

Update: 2024-04-25 09:05 GMT

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பழைய இரும்பு கடை மற்றும் மின்சார கம்பத்தை இடித்த டேங்கர் லாரியால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்கு நாயகன்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரியால், இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் ஓட்டுநர் மற்றும் 2 கிளீனர்கள் படுகாயம் அடைந்தனர். 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். விபத்து தொடர்பாக மின்சார துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்