ஹாஸ்டலில் பற்றிய தீ.. 150 பேர்எதிர் பாரா நேரம் ஊழியர்கள் செய்த செயல் - கன நொடியில் மாறிய காட்சி

Update: 2024-04-28 07:42 GMT

ஒசூர், பழைய பெங்களூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதியில் மின் கசிவு காரணமாக திடீர் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடுதியில் 150க்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில், அதிகாலை நேரத்தில் விடுதியின் 2வது மாடியில் உள்ள வரவேற்பறையில் திடீரென மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விடுதியின் ஊழியர்கள் ஒவ்வொரு அறையாக சென்று அங்கிருந்தவர்களை எழுப்பி உடனடியாக அனைவரையும் வெளியேற செய்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்