கனமழையில் நேர்ந்த சோகம் - துடிதுடித்து நின்ற சிறுவன் மூச்சு

Update: 2024-05-10 13:21 GMT

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது வெளியே சென்ற 14 வயது சிறுவன், மழையில் நனையாமல் இருக்க மரத்தடியில் ஒதுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் மீது மின்னல் தாக்கியதால், சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தகவலறிந்த போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்