இடி, மின்னலுடன் திடீரென பெய்த மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

Update: 2024-05-10 02:12 GMT
  • இடி, மின்னலுடன் திடீரென பெய்த மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
  • தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்தது..
  • குறிப்பாக நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான பட்டணம் வடுகம், புதுப்பட்டி, நாமகிரிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
  • நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக மழை பெய்தது.
  • இதேபோல், தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மழை பெய்தது.
  • மேலும், கோவை நகர் பகுதியிலும் பரவலாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்