அதிரடி காட்டிய ஆணையர் - பரபரப்பான பூந்தமல்லி நகர் மன்ற கூட்டம்

Update: 2024-01-31 16:21 GMT

பூந்தமல்லி நகர் மன்ற கூட்டத்தில் இருந்து, பெண் உறுப்பினர்களின் கணவர்கள் வெளியே செல்லவில்லை என்றால், கூட்டத்தில் இருந்து வெளியேறுவேன் என்று, ஆணையர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை 11 மணி அளவில் கூட்டம் தொடங்கிய நிலையில், பெண் உறுப்பினர்களின் கணவர்களை கூட்டத்தில் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்போது, இதை அனுமதிக்க முடியாது என்று ஆணையர் லதா கூறியதோடு, நகர் மன்ற உறுப்பினர்களை கூட்டத்தில் இருந்து வெளியேற வில்லை என்றால், அதிகாரிகள் வெளியேறி விடுவோம் என்று எச்சரித்தார். இதையடுத்து நகர் மன்ற தலைவருக்கும், ஆணையருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், உறுப்பினர்களின் கணவர்கள் வெளியே சென்ற நிலையில் கூட்டம் தொடங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்