உயிரை குடித்த வயிற்று வலி.. MBBS மாணவர் துடிதுடித்து பலி..

Update: 2024-03-17 09:53 GMT

தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி மாணவர் திடீரென வாந்தி எடுத்து வயிற்று வலியால் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த 26 வயது அஜித்குமார் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்த நிலையில், அரியர் எழுத கடந்த சில நாட்களாக மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். இந்த நிலையில் அஜித் திடீரென வாந்தி எடுத்து வயிற்று வலியால் துடிதுடித்து மயங்கி விழுந்துள்ளார்... சக மாணவர்கள் உடனே அஜித்குமாரை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்... போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்