கோயிலில் அன்னதானம் சாப்பிட்டு கை கழுவ சென்ற அக்கா, தங்கச்சி பரிதாப பலி

Update: 2024-05-09 08:30 GMT

கன்னியாகுமரி அருகே கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி சகோதரிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சலிங்கபுரம் பகுதியில் உள்ள ராகவேந்திரா கோவிலுக்கு 14 மற்றும் 12 வயதுடைய சகோதரிகள், சாமி தரிசனம் செய்ய சென்றதாக கூறப்படுகிறது. கோவிலில் வழங்கிய அன்னதானத்தை சாப்பிட்டுவிட்டு தெப்பக்குளத்தில் கைகழுவ சென்றபோது, இருவரும் தவறி குளத்தில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்டநேரம் போராடி, சகோதரிகள் இருவரின் உடல்களையும் சடலமாக மீட்டனர். இருவரது உடல்களும் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்