கோவை டூ கன்னியாகுமரி- வெளுத்துவாங்க போகும் மழை - சென்னை லிஸ்டில் இருக்கிறதா?

Update: 2024-05-09 09:54 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆவடி, சேக்காடு, பட்டாபிராம், திருநின்றவூர், முத்தாபுதுபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. நோய் பரவும் அபாயம் உள்ளதால், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர். எனினும் அக்னி வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்