வேலை செய்யும்போதே அதிர்ச்சி பலி - நடுங்க வைக்கும் பயங்கரம்

Update: 2023-11-09 07:36 GMT

சென்னை, மாதவரத்தில் மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர் உயிரிழந்தார். சென்னை, மாதவரத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் வடம்பெரும்பாக்கம் பகுதியில் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று தனது அலுவலகம் எதிரில் உள்ள மின்கம்பத்தில் ஏறி பராமரிப்பு பணிகளை செய்தபோது, திடீரென மின்சாரம் தாக்கி பலியானார். முதற்கட்ட விசாரணையில், ஏழுமலை பணியிலிருந்தபோது மின்சாரம் நிறுத்தப்பட்டநிலையில், திடீரென தற்காலிக உபயோகத்திற்காக மின்வாரிய அலுவலகத்தில் இருந்த ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால் அதிலிருந்து வந்த மின்சாரம் தாக்கி பலியானது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்