அரசு பள்ளியில் தீ வைத்த மர்ம நபர்கள்-எரிந்து நாசமான ஆவணங்கள்.. விருத்தாசலத்தில் அதிர்ச்சி

Update: 2024-04-24 02:45 GMT

விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், அலுவலக கோப்புகள் எரிந்து சேதம் அடைந்தன. பள்ளி வளாகத்தில், மாவட்ட கல்வி அலுவலகம் சம்பந்தப்பட்ட கோப்புகளை வைத்துள்ள அறைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக தெரிகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், விரைந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் . இந்த தீ விபத்தில், முக்கிய கோப்புகள் எரிந்து நாசம் அடைந்தன. அந்த அறைக்கு தீ வைத்த மர்ம நபரை விருத்தாச்சலம் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்