மகன் கண் முன்னே தந்தையை துடிதுடிக்க குத்தி கொன்ற உறவினர்..- எடப்பாடியில் பயங்கரம்..

Update: 2024-04-24 01:56 GMT

எடப்பாடி அருகேயுள்ள காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த கோவிந்தன் மற்றும் அவரது மகன் ஸ்ரீதரண் என்பவரும் தாக்கப்பட்ட இந்த சம்பவத்தில், கோவிந்தன் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். தொடர்ந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஸ்ரீதரண் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கோவிந்தனின் உறவினரான முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தங்களுக்கு சொந்தமான இடத்தில் கோவிந்தனுக்கும், முருகனுக்கும் இடையே வழித்தட பிரச்சினை இருந்து வந்தது தெரியவந்தது. இதில், சம்பந்தப்பட்ட நிலத்தில் உள்ள மின்கம்பி வேலிக்கு மின் இணைப்பு கொடுத்து, அதன் மூலம் கோவிந்தனை தீர்த்து கட்ட முருகன் திட்டம் தீட்டியதும் அம்பலமானது. இந்நிலையில், பிரச்சினைக்குரிய வழித்தடத்தில், தனது மகனுடன் சேர்ந்து கோவிந்தன் மரங்களை வெட்டி போட்டிருந்ததாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கோவிந்தனை முருகன் கத்தியால் குத்தி கொன்றதும் தெரியவர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்