கணவனை கொன்று புதைத்து ஊரையே ஏமாற்றிய பெண்.. 2½ வருடம் கழித்து வெளிவந்த பகீர் உண்மை

Update: 2024-04-23 16:10 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில், தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை... காதலனுடன் சேர்ந்து கொன்று நாடகாமடி வந்த மனைவி இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் இடையே கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவரின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்து ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், இருவரையும் கண்டித்து எச்சரித்த நிலையில், காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல ஆர்த்தி திட்டமிட்டிருக்கிறார். இதன்படி, கடந்த 2021 ஆம் ஆண்டு.. தேவகோட்டை அருகேயுள்ள இலக்கினி வயல் காட்டுப்பகுதிக்கு ஸ்ரீகாந்தை மது அருந்த அழைத்துச் சென்ற இளையராஜா, அங்கு தன் நண்பர்களுடன் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டிக் கொன்று புதைத்துள்ளார். இதில், குடும்ப பிரச்சினையால் கணவர் கோபித்துக்கொண்டு வெளியூர் சென்று விட்டதாக கூறி சுமார் இரண்டரை வருடங்களாக ஆர்த்தி நாடகமாடி வந்ததும் தெரியவந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்