பொறுத்து பொறுத்து பொங்கிய மழை.. விரட்டியடிக்கப்பட்ட வெப்ப அலை.. தமிழகத்தில் இடி, மின்னலுடன் பேய்மழை

Update: 2024-05-10 06:42 GMT

தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. வடுகபட்டி குள்ளப்புரம், எ.வாடிப்பட்டி, சில்வார்பட்டி, தேவதானப்பட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் 2 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

கோவையில் அதிகாலை 3 மணி முதல் கனமழை பெய்துள்ளது. இதனால் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சாலைகளில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. ரயில் நிலையம், அரசு மருத்துவமனை சந்திக்கும் பகுதிகள், மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகளாக மாநகராட்சி அறிவித்துள்ளது. மாற்று வழிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்