"பழனி கோயிலில் இனி இதற்கு தடை.." - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2024-03-05 14:24 GMT

பக்தர்கள் வருகை காரணமாக பழனி மலையடிவாரத்தில் நெரிசல் ஏற்படுவதாகவும், கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிரிவல பாதையில் உள்ள அனைத்து கடைகளையும் அகற்றக் கோரி உத்தரவிட்டது. அதன் பேரில், வரும் எட்டாம் தேதி முதல் அனைத்து தனியார் வாகனங்களும் கிரிவல பாதையில் அனுமதிக்கப்படாது எனவும், பழனி கோயிலுக்கு வரும் வாகனங்களை சுற்றுலா வாகன நிறுத்தத்தில், நிறுத்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கிரிவலப் பாதையில் பக்தர்கள் செல்வதற்கு வசதியாக, பேட்டரி கார்கள் மற்றும் மினி பேருந்தை இயக்கவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்