கோயிலில் படையலிடுவதில் இரு தரப்பு மோதல்-ஆற்றில் இறங்கி நூதன போராட்டம் நெல்லையை பரபரப்பாக்கிய சம்பவம்

Update: 2024-02-13 14:36 GMT

கல்லிடைக்குறிச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற சந்தன மாரியம்மன் கோவிலில் இன்று 8ஆம் திருவிழா நடைபெற்றது. அப்போது, ஒரு தரப்பினர் படையலிட்டு அம்மனை வழிபட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் ஆற்றில் இறங்கி போராடியதோடு, ஆதார் அட்டையை ஒப்படைப்பதாக எச்சரித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த சார் ஆட்சியர் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்