"ஒவ்வொரு நாளும் ரூ.30 லட்சம் போச்சு..நாங்க எப்படி தான் தொழில் பண்றது"

Update: 2024-02-22 08:30 GMT

நாகபட்டினம் மாவட்டம், செருதூரை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மீனவர்கள் தோப்புத்துறை அருகே 7 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது காரைக்காலை சேர்ந்த சில மீனவர்கள் அதிவேக என்ஜின் விசைப்படகுகளில் வந்து செருதூர் மீனவர்களின் வலைகளை கிழித்து நாசம் செய்தனர். இதில் தமிழ்செல்வன், முருகபாண்டி, ஐயப்பன், சித்திரவேல் உள்ளிட்ட மீனவர்களின் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகள் கிழிந்து நாசமானது. மேலும் தங்கள் எல்லையில் மீன் பிடித்தால், கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். வெறும் கையுடன் கரைக்கு திரும்பிய மீனவர்கள், அத்துமீறலில் ஈடுபட்ட காரைக்கால் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மீன்வளத்துறை அதிகாரி மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்