கள்ளழகர் இறங்கும் இடம் அருகே படுபயங்கர கொலை.. அதிர்ச்சியில் மதுரை

Update: 2024-04-23 06:04 GMT

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா நடைபெற்ற பகுதிக்கு அருகே, இளைஞர் ஒருவரை மர்மநபர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பரான சிவகங்கையை சேர்ந்த சோனை ஆகியோர், மதுரை மதிச்சியம் பகுதியில் அயன் கடை நடத்தி வந்தனர். இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், இவர்கள் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருநத் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், சிகிச்சைப் பலனின்றி சோனை உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சனையில், முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்திற்கு அருகில், இந்த கொலை சம்பவம் நடைபெற்றதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்