அழைக்க அழைக்க வரமறுத்த மனைவி...கணவன் செய்த பகீர் காரியம் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

Update: 2024-04-23 10:27 GMT

கிருஷ்ணகிரி அருகே, குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியை, கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.கல்லாவி அடுத்த வெள்ளிமலை அருகே வசித்து வந்த சின்னமுத்து - சீதா தம்பதிக்கு, 4 குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக, கணவனை விட்டு பிரிந்த சீதா, தனது குழந்தைகளுடன், உறவினர் வீட்டில் 2 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சீதாவின் உறவினர் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற சின்னமுத்து, மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அப்போது அவர் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த சின்னமுத்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியதில், சீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், தப்பியோடிய சின்னமுத்துவை தேடி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்