இரு நாடுகளின் பிணைப்பை உறுதி படுத்தும் திருவிழா.. "ஒரு இந்தியர் கூட பங்கேற்கவில்லை"

Update: 2024-02-21 11:13 GMT

மீனவர்கள் போராட்டம் காரணமாக, கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில், இந்திய தரப்பிலிந்து யாத்ரிகர்கள் பங்கேற்கவில்லை என, ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்திய தரப்பிலிருந்து 3 ஆயிரத்து 500 பக்தர்களும், இலங்கை தரப்பிலிருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், மீனவர்களின் போராட்டம் காரணமாக கச்சத்தீவு விழாவில் பக்தர்கள் பங்கேற்கவில்லை என ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்