நான் கேட்டது சிக்கன் பிரியாணி! ஆனா அவங்க கொடுத்தது கரப்பான் பூச்சி பிரியாணி!திண்டுக்கல்லில் பரபரப்பு

Update: 2023-11-19 04:48 GMT

முத்தழகு பட்டியை சேர்ந்த விமல் என்பவர்,

தனது உறவினருடன் திண்டுக்கல்லில் உள்ள பிரபல பிரியாணி கடைக்கு சென்று, பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அவர்களுக்கு பரிமாறப்பட்ட பிரியாணியை சாப்பிட முயன்றபோது, அதில்

கரப்பான்பூச்சி இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடை நிர்வாகத்தினரிடம் கேட்டபோது,

அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த

வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்த புகாரைத்தொடர்ந்து அந்த பிரியாணி கடையில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது உணவு தயாரிப்பு கூடம் தரமற்றதாக இருந்ததால்,

4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பிரியாணி தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை பகுப்பு ஆய்வுக்காக சென்னை கிண்டியில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்