எப்படி ஓட்டு போடவேண்டும்? ``நல்லா கவனித்து கொள்ளுங்கள்’’

Update: 2024-04-18 05:35 GMT

#thiruvannamalai | #loksabhaelection2024

எப்படி ஓட்டு போடவேண்டும்? ``நல்லா கவனித்து கொள்ளுங்கள்’’

திருவண்ணாமலையில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை வாக்காளர்கள் பங்கேற்றனர். உலகின் மிகப்பெரும் தேர்தலில் பங்கேற்கவுள்ள அவர்களை கவுரவிக்கும் வகையில், தலையில் கிரீடம் சூட்டப்பட்டது. பின்னர், எப்படி வாக்களிக்க வேண்டும், வாக்களித்த பின் எப்படி சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு விளக்கமும் அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்