"கொடூரமாக தாக்கும் வீடியோ இருந்தும் எப்படி சந்தேக மரணம்?" - 70 வயதில் தம்பிக்காக போராடும் அண்ணன்

Update: 2024-04-18 07:17 GMT

#chennai | #crime

"கொடூரமாக தாக்கும் வீடியோ இருந்தும் எப்படி சந்தேக மரணம்?" - 70 வயதில் தம்பிக்காக போராடும் அண்ணன்

தனது சகோதரர் கொன்றவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என காவல் ஆணையர் அலுவலகத்தில் முதியவர் புகார் அளித்துள்ளார்.

சென்னை மவுண்ட் ரோடு பூத பெருமாள் தெருவை சேர்ந்த சேர்ந்த 70 வயது முதியவர் எல்லப்பன் தனது தம்பி கோவிந்தசாமியுடன் சேர்ந்து மெக்கானிக் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த மார்ச் 8 ஆம் தேதி, எல்லப்பன் வீடு அருகே பாலாஜி என்பவரது வீட்டில் துக்க நிகழ்வு நடைபெற்ற போது, மெக்கானிக் கடையில் இருந்த இருசக்கர வாகனங்களை எடுத்து வைப்பது தொடர்பாக இருதரப்பு இடையே மோதல் வெடித்தது. இதில் துக்க நிகழ்வுக்கு வந்தவர்கள் தாக்கியதில்

கோவிந்தசாமி நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்காக பதியாமல் சந்தேக மரணம் என பதிவு செய்ததாகவும், பாலாஜி உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சிசிடிவி ஆதாரங்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் எல்லப்பன் புகார் அளித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்