வாட்டி வதைக்கும் வெயில் - விவசாயிகள் தலையில் விழுந்த பேரிடி

Update: 2024-05-01 11:08 GMT

இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் மிளகாய் செடிகள், கத்திரிக்காய், தக்காளி, முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறி செடிகளை பயிரிட்டுள்ளனர்... அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் கடுமையான வறட்சி நிலவுவதாலும் விவசாய கிணறுகளில் போதிய அளவு நீர் ஆதாரம் இல்லாததாலும் காய்கள் செடியிலேயே கருகி, வாடி, காய்ந்து சுருங்கி செடிகளுக்கு அடியிலேயே விழுந்து கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது... கடன் வாங்கி பயிரிட்ட நிலையில், விற்பனைக்கு வரவேண்டிய காய்கறிகள் கால்நடைகளுக்கு உணவாக்கப்பட்டு வருகின்றன. தோட்டக்கலையில் செடிகளில் இருந்த காய்கறிகள் விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய இந்த நேரத்தில் வருண பகவானின் வஞ்சனையால் வறண்டு போன வயல் வெளியில் செடிகள் பாழாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்