வாக்கிங் சென்ற இளைஞரை சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல்..! திருத்தணியில் பரபரப்பு | Thiruttani

Update: 2024-02-02 12:48 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞரை, மர்ம நபர்கள் இரும்பு ராடால் தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் நகரியில் கார் ஷோரூம் நடத்தி வரும் பிரதீஷ் என்ற இளைஞர், திருத்தணி பைபாஸ் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவரை மர்ம நபர்கள் இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த இளைஞரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்