தமிழகத்தை மிரட்டும் ``ஃப்ளு'' மக்களே அலெர்ட்...

Update: 2024-03-01 06:39 GMT

மாறுபட்ட சீதோசன நிலை காரணமாக தமிழகத்தில் ஃப்ளு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தொடரும் பனிப்பொழிவால் பலருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் உடல் சோர்வு, தலைவலி உள்ளிட்ட காரணங்களுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்