சைலெண்டாக இறங்கி சம்பவம் செய்யும் ED... திடீர் என்ட்ரியால் பரபரக்கும் சென்னை

Update: 2024-04-18 08:22 GMT

#chennai | #edraid

சைலெண்டாக இறங்கி சம்பவம் செய்யும் ED... திடீர் என்ட்ரியால் பரபரக்கும் சென்னை

சட்டவிரோத பணபரிமாற்ற புகாரைத் தொடர்ந்து, சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம் மோகன் குமாரமங்கலம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தர்ஷன் குமார் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பிரதான சாலையில் வசித்து வரும் முபாரக் உசைன் என்பவரது வீடு, சென்னை அசோக்நகரில் உள்ள தனியார் ஆடிட்டிங் நிறுவனம் உள்ளிட்ட இட​ங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வெளிநாட்டிற்கு சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதா? என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்