விறகு வியாபாரிக்கு அரிவாளால் வெட்டு | பள்ளி மாணவர்கள் கைது

Update: 2024-01-11 05:35 GMT

காரைக்குடி மருதுபாண்டியர் நகரில், விறகு வியாபாரியை அரிவாளால் வெட்டிய பள்ளி மாணவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். விறகு வியாபாரிகளான மணிகண்டன் மற்றும் பாதகுமார் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது, கோதண்டராமன் என்பவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான தகராறில் அந்த கும்பல் பாதகுமாரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை நேரில் பார்த்தவரையும் தாக்கியுள்ளனர். இந்நிலையில் 6 பேர் கொண்ட அந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்