இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி மீது திமுகவினர் தாக்குதல் - கடலூரில் பரபரப்பு

Update: 2024-04-20 11:35 GMT

பண்ருட்டி அடுத்துள்ள மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய பொருளாளான இவர், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸை ஆதரித்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த பணியின் போது, திமுகவினருக்கும் சசிகுமாருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், சசிகுமாரை நள்ளிரவில் போன் போட்டு அழைத்து திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தலையில் பலத்த காயமடைந்த சசிகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், திமுக நிர்வாகிகள் நால்வரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்