கல்லூரி வளாகத்தில் ஜூனியர்களை.. துரத்தி துரத்தி தாக்கிய சீனியர்கள்

Update: 2024-05-08 06:12 GMT

உதகையை அடுத்த கேத்தி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், விழா நடத்துவற்காக மூன்றாம் ஆண்டு மாணவர்கள், பணம் வசூலித்து வந்தனர். அதில், இண்டாம் ஆண்டு படிக்கும் இரண்டு மாணவர்கள் குறித்த நேரத்துக்குள் பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அந்த 2 மாணவர்களுக்கும், மூன்றாமாண்டு சீனியர் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, சீனியர் மாணவர்கள் சேர்ந்து கொண்ட அந்த இருவரையும் சுற்றி வளைத்து துரத்தி துரத்தி ஆக்ரோசத்துடன் தாக்கியுள்ளனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், 9 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கிடையே, தாக்குதலில் காயமடைந்த ஒரு மாணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுளனர்.

Tags:    

மேலும் செய்திகள்