காப்பகத்தில் சிறுவர்கள் கொடுமை - சென்னையில் அதிர்ச்சி

Update: 2024-04-24 02:29 GMT

கோடம்பாக்கத்தில் சுமார் 40 வருடங்களாக இயங்கி வரும் காப்பகம் ஒன்றில், பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் என பலர் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இதில், சென்னை போரூரை சேர்ந்த பெண் ஒருவர், தனது இரு மகன்கள் இந்த காப்பகத்தில் தங்கி படித்து வருவதாகவும், அவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட மாணவர்களை நிர்வாகத்தினர் கொடுமை படுத்துவதாகவும் கூறி குற்றம் சுமத்தியிருக்கிறார். மேலும், மாணவர்களுக்கான மருத்துவமனை செலவுகள் காப்பகத்தில் இலவசம் என்ற நிலையில், அதற்கான பணத்தை பெற்றோர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பெறுவதாக கூறி சென்னை, அசோக் நகர் காவல்நிலையத்தில் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்