ராமேஸ்வரம் மீனவர்களை வரவேற்ற பாஜகவினர்...

Update: 2023-07-27 09:09 GMT

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 ராமேஸ்வரம் மீனவா்கள் சென்னை வந்தனா். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காத்திருந்த பா.ஜ.க. சார்பில் மாநில மீனவரணி தலைவர் நீலாங்கரை முனுசாமி உள்ளிட்டோர் சால்வை அணிவித்து மீனவர்களை வரவேற்றனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து, தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவா்களை சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்