தகாத உறவில் இருந்த திருமணமானவரை பொண்ணு பாக்க சென்ற இளைஞர்.. பெண்ணின் தாய்க்கு நடந்த அதிபயங்கரம்

Update: 2024-04-18 07:12 GMT

#extramaritalaffair #tenkasi

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணை மணமுடிக்க விரும்பி பெண் கேட்டுச் சென்ற இளைஞர், பெண் தர மறுத்த அவரின் தாயை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vovt

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர், திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பெண்ணை தனக்கு மண முடித்து தருமாறு சுரேஷ் கேட்ட நிலையில், அதற்கு பெண்ணின் தாய் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனிடையே, அப்பெண்ணும் சுரேஷிடம் பழகுவதை தவிர்த்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கோபத்தில் இருந்த இளைஞர், தன் உறவினர் ஒருவருடன் மீண்டும் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற நிலையில், அப்பெண்ணையும், அவரின் தாயையும் அரிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், பெண்ணின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் காயத்துடன் நூலிழையில் உயிர் தப்பினார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தில், சுரேஷ் மற்றும் அவரின் உறவினரான 20 வயது இளைஞர் மாரிமுத்து ஆகியோரை கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்