இரவு முழுவதும் பாட்டியின் பக்கத்தில் படுத்து உறங்கிய பாம்பு

கடலூர் அருகே இரவு முழுவதும் பாம்பு ஒன்று மூதாட்டியுடன் படுக்கையில் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-01-16 08:45 GMT
கடலூர் அருகே இரவு முழுவதும் பாம்பு ஒன்று மூதாட்டியுடன் படுக்கையில் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சக்குப்பம் காமராஜர் நகரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது வீட்டில் படுக்கையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் படுக்கையில் விசித்திரமான சப்தம் கேட்டு எழுந்து பார்த்த போது, அருகில் பாம்பு ஒன்று படுத்திருப்பதைக் கண்டு மூதாட்டி அதிர்ந்தார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் பாம்பு பிடிக்கும் வீரரை அழைத்து பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர். இரவு முழுவதும் மூதாட்டியை எதுவும் செய்யாமல் பாம்பு சாதுவாக இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்