காவல் ஆய்வாளர்கள் ரவுடிகளுக்கு உதவி - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளுக்கு உதவி செய்ததாக வந்த புகாரில், 3 காவல் ஆய்வாளர்கள் வடக்கு மண்டலத்தில் இருந்து, தெற்கு மண்டலத்திற்கு பணியிடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-01-13 15:12 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளுக்கு உதவி செய்ததாக வந்த புகாரில், 3 காவல் ஆய்வாளர்கள் வடக்கு மண்டலத்தில் இருந்து, தெற்கு மண்டலத்திற்கு பணியிடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.தொழிற்சாலைகள் நிறைந்த ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம்  உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு, தேடப்படும் குற்றவாளியான பிரபல ரவுடி படப்பை குணாவிற்கு காவல் ஆய்வாளர்கள் சிலர் உதவி செய்வதாக புகார்கள் வந்தன. இது குறித்த விசாரணையை தொடர்ந்து, ஸ்ரீ பெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகேஷ்வரி, ஸ்ரீ பெரும்புதூர் ஆய்வாளராக  ராஜாங்கம் மற்றும் மணிமங்கலம் ஆய்வாளர் பாலாஜி ஆகிய 3 காவல் ஆய்வாளர்களை இடம் மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அவர்களை, வடக்கு மண்டலத்தில் இருந்து
தெற்கு மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்து, அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது,
ரவுடிகளுக்கு உதவிய மற்ற காவலர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்