திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய காதலன்..இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி, பழகி பின்னர் காதலன் கைவிடப்பட்டதால், இளம்பெண் விஷம் குடித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

Update: 2022-01-11 14:52 GMT
ஐந்தாம்கட்டளை கிராமத்தை சேர்ந்த பெரியமுத்து என்பவரது மகள் 25 வயதான செல்வமணி என்ற இளம்பெண்ணை, சதீஷ் என்ற ஆட்டோ ஓட்டுநர், திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகியுள்ளார். பின்னர் திருமணம் செய்ய மறுத்தததால், செல்வமணி தர்ணாவில் ஈடுபட்டார். போலீசாரும், ச​தீஷூக்கு ஆதரவாக செயல்பட்டதால் வேதனையடைந்த செல்வமணி விஷம் அருந்தி வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது 
 இளம் பெண் ஆபத்தான நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலைக்கு முயன்ற பெண் வெளியிட்ட வீடியோவில் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய சதீஷ் மற்றும் அவரது சித்தப்பா ஆகிய இருவரும் தான் எனக் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்