ஆன்லைன் ரம்மி விளையாடி கடன் தொல்லை - ஒருவர் தற்கொலை !

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து கடன் தொல்லையால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை...

Update: 2022-01-10 05:11 GMT
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து கடன் தொல்லையால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை...

சென்னை கோயம்பேடு சீமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்/41, சின்மயா நகரில் ப்ரெளசிங் சென்டர் நடத்தி வருகிறார்.

மது பழக்கத்தோடு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நிறைய பணத்தை இழந்தது அதனால் நிறைய கடன் ஏற்ப்பட்டுள்ளது..

இந்நிலையில் நேற்று இவரது மனைவி மற்றும் குழந்தைகள் தூங்க சென்ற நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் மனைவி வெளியே வந்து பார்க்கும் பொழுது ஹாலில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இது குறித்து மனைவி நளினி கொடுத்த தகவலின் பேரில் கோயம்பேடு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்