ஆசிய பளுதூக்கும் போட்டியில் 13 தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! - முதல்வரிடம் நேரில் வாழ்த்து

தமிழகத்தைச் சேர்ந்த 20 வீரர் வீராங்கனைகள் ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்றுள்ள நிலையில் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.;

Update: 2022-01-06 04:14 GMT
தமிழகத்தைச் சேர்ந்த 20 வீரர் வீராங்கனைகள் ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்றுள்ள நிலையில் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

துருக்கியில் ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டிநடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர் தமிழகத்தில் இருந்து 25 வீரர்கள் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் தமிழக வீரர்கள் 13 தங்கம், 6 வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கங்களை வென்றனர். இதனையடுத்து தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்