முல்லை பெரியாறு - தமிழக அரசு விளக்க மனு
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசு தவறான தகவல்கள் அளித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்க மனு தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விளக்க மனு தாக்கல் :
"முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கை ஏற்க முடியாது"
"அணையின் ஆயுட்காலம் 50 ஆண்டுகள் என அறிவியல் ஆதாரம் இன்றி கூறும் கேரள அரசு"
"அணையின் ஆயுட்காலம் என்பது பராமரிப்பு, புனரமைப்பு பணிகளுடன் தொடர்புடையது"
"50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கேரள அரசு கூறுவது கற்பனையானது"
"அணை பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசு தவறான தகவல் பரப்பி வருகிறது"
"பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரள அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது"
"மத்திய நீர்வள ஆணைய அறிக்கையின்படி இயங்கும் தமிழக அரசு"
"கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக செயல்படுகிறது"