முழு கொள்ளளவை எட்டிய கவிநாடு கண்மாய் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு கண்மாய் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Update: 2021-11-10 09:26 GMT
கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கவிநாடு கண்மாய் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கரையோரத்தில் வசிக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்